- வீடு›
- அழகு குறிப்புகள்›
- முடி உதிர்வை கட்டுக்குள் வைக்க வேண்டுமா... இதோ உங்களுக்கான வழிமுறை
முடி உதிர்வை கட்டுக்குள் வைக்க வேண்டுமா... இதோ உங்களுக்கான வழிமுறை
By: Nagaraj Thu, 03 Sept 2020 09:42:28 AM
பெண்களுக்கு உள்ள மிக முக்கிய பிரச்னை என்றால் அது முடி உதிர்தல்தான். கூந்தல் அழகை கெடுக்கும் இந்த முடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்க நினைப்போர் முதலில் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதை முடிந்த அளவு குறைத்தல் வேண்டும். மேலும் முடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கும் இயற்கை வழியான மிளகு எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். சரி இதை எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை:
மிளகு- 2 ஸ்பூன்
கரிசலாங்கண்ணி- கைப்பிடியளவு
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
விளக்கெண்ணெய்- 150 மில்லி
செய்முறை: மிளகினை வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
அடுத்து கரிசலாங்கண்ணியையும், கறிவேப்பிலையையும் வெயிலில் உலர்த்திப்
பொடித்துக் கொள்ளவும்.
பின்னர் விளக்கெண்ணெயினை நன்கு சூடேற்றி,
அதில் பொடித்த பொருட்களைப் போட்டு வாசம் வரும்வரை காய்ச்சவும். அடுப்பில்
இருந்து இறக்கி ஆறவிட்டு வடிகட்டிப் பயன்படுத்தினால் முடி அடர்த்தி கூடுவதை
நீங்கள் கண்கூடாகப் பார்ப்பீர்கள். அப்புறம் என்ன உங்கள் கூந்தல்தான் செம
அழகு என்று போட்டியே போடலாம் போங்க. முடி உதிர்வா அப்படின்னா என்ன என்றும்
கேட்பீர்கள்.