Advertisement

முகம் பார்க்க மிகவும் வறண்டு காணப்படுகிறதா..?

By: Monisha Thu, 06 Aug 2020 3:57:38 PM

முகம் பார்க்க மிகவும் வறண்டு காணப்படுகிறதா..?

முகம் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது. முகத்தை வெண்மையகவும் இருக்க நாம் என்னவேணாலும் செய்யுவோம். அதோடுமுகத்தில் ஏற்படுகின்ற பருக்கள், கரும்புள்ளிகள், முக வறட்சி ஆகியவற்றை நீக்கவும் நாம் பலவித கிரீம்களை பயன்படுத்தவும்.

இப்படி வேதி பொருட்களை தவிர்த்து நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நம்மால் எளிதில் நமது முகத்தின் பிரச்சினைகளை குணப்படுத்தி விடலாம். அதுவும் சர்க்கரை வள்ளி கிழங்கை வைத்து இதற்கு அருமையான தீர்வை தந்து விடலாம். குறிப்பாக முக வறட்சியை போக்க இந்த கிழங்கு நல்ல தீர்வை தருகிறதாம். சரி, வாங்க எப்படி இதை செய்வது என்பதை இனி தெரிந்து பயன் பெறுவோம்.

face,beauty,dryness,yogurt,oats,sugar potato ,முகம்,அழகு,வறட்சி,யோகர்ட்,ஓட்ஸ்,சர்க்கரை வள்ளி கிழங்கு

முகம் பார்க்க மிகவும் வறண்டு காணப்படுகிறதா..? இதனை சரி செய்ய இந்த குறிப்பே போதும். இதற்கு தேவையான பொருட்கள்.. யோகர்ட் 1 ஸ்பூன், ஓட்ஸ் 1 ஸ்பூன், சர்க்கரை வள்ளி கிழங்கு பாதி

முதலில் சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஓட்ஸ் மற்றும் யோகர்ட் சேர்த்து அரைத்து கொண்டு முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முக வறட்சி நீங்கி விடும்.
வெண்மையாக வைக்க

முகத்தை வெண்மையாக மாற்ற சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து முகத்தில் நேரடியாக பூசவும். இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் முகத்தின் கருமையை குறைத்து வெண்மையாக மாற்றி விடும் தன்மை கொண்டது. அத்துடன் முகத்தில் உள்ள அழுக்குகளையும் அகற்றி விடும்.

Tags :
|
|
|
|