- வீடு›
- அழகு குறிப்புகள்›
- முடி உதிர்வு பிரச்னைக்கு வெந்தயம் கொடுக்கும் அருமையான தீர்வு
முடி உதிர்வு பிரச்னைக்கு வெந்தயம் கொடுக்கும் அருமையான தீர்வு
By: Nagaraj Sat, 10 Sept 2022 11:58:41 PM
சென்னை: வெந்தயத்தை பயன்படுத்தி ஒரு அருமையான கூந்தல் எண்ணெயை தயார் செய்வோம்.. இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தும் போது தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். அதாவது தலை முடி உதிர்வு, சொட்டை, வழுக்கை. இளநரை, நுனி முடி வெடிப்பு போன்ற பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். சரி வாங்க இப்பொழுது எண்ணெய் தயார் செய்யும் முறையை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கற்றாழை – ஒரு மடல்
வெந்தயம் – 1 1/2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 150 மில்லி
விளக்கெண்ணெய் – ஒரு ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
வைட்டமின் ஈ கேப்சூல் – 1
செய்முறை: முதலில் 1 1/2 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் அரைமணி நேரம் நன்றாக ஊறவைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கற்றாழை மடலை எடுத்துக்கொள்ளுங்கள் அதன் நுனி பகுதியின் இரு புறமும் சிறிதளவு கட் செய்து சிறிது நேரம் அப்படியே வைத்திருங்கள், இப்படி செய்வதால் கற்றாழையில் இருந்து ஒருவிதமான மஞ்சள் நிறத்தில் திரவம் வரும், அந்த திரவம் முழுவதும் வெளியே வைத்ததும் கற்றாழையை நன்றாக சுத்தமாக கழுவி கொள்ளுங்கள்.
பின் கற்றாழையை மேல் படித்ததில் காட்டியுள்ளது போல் கட் செய்து
கொள்ளுங்கள். அதாவது கற்றாழையை நாடு பகுதியில் கட் செய்து அதன் பிறகு
அவற்றில் உள்பகுதியில் சிறு சிறு கோடுகளாக நீளமாகவும், அகலமாகவும் லேசாக
கட் செய்து கொள்ளுங்கள்.
ஊறவைத்த வெந்தயத்தை கற்றாழையில் வைக்க
வேண்டும். பிறகு கற்றாழையில் வைத்து கட்டி விடுங்கள். அதன் பிறகு ஒரு
கார்டன் துணியை வைத்து கற்றாழையை காற்று போகாத அளவிற்கு மூடிவிட வேண்டும்.
பின் இரண்டு நாட்கள் அப்படியே வைத்திருங்கள் இந்த இரண்டு நாட்களிலும் காலை
மற்றும் மாலை நேரங்களில் லேசாக தண்ணீர் தெளித்து விடுங்கள். ஆனால் துணியை
அகற்றிவிடக்கூடாது துணியின் மேல் தண்ணீரை தெளித்துவிடுங்கள்.
இரண்டு
நாள் கழித்து கற்றாழையை திறந்து பார்த்தால் வெந்தயம் நன்றாக முளைகட்டி
வந்திரும். இந்த வெந்தயத்தை வைத்து தான் நாம் இப்பொழுது எண்ணெய் தயார்
செய்ய போகிறோம். முளைக்கட்டிய வெந்தயத்தை தனியாக ஒரு பவுலில்
எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல் அந்த கற்றாழையையும் சிறு சிறு துண்டுகளாக
சிறிதளவு கட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு
இரும்பு சட்டியை வைத்து அவற்றில் 150 மில்லி தேங்காய் எண்ணெயை ஊற்றவும்
எண்ணெய் நன்கு கொதித்து வரும்பொழுது, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து
முளைகட்டி வந்த வெந்தயத்தை அதில் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு
கொதிக்கவிடவும், பின் கற்றாழையை அதில் சேர்த்து திரும்பவும் ஐந்து நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு
ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு வைட்டமின் ஈ கேப்சூலின் ஜெல்லை மட்டும்
பிழிந்து அதனுடன் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். 5 நிமிடம்
கழித்து அடுப்பை அணைத்து ஒரு நாள் முழுவது அப்படியே வைத்திருங்கள். பின்
மறுநாள் அந்த எண்ணெயை வடிகட்டி தலைக்கு பயன்படுத்தலாம்.
இந்த
எண்ணெயை பயன்படுத்த ஆரம்பித்த இரண்டு வாரங்களிலேயே உங்களுக்கு நல்ல பலன்
கிடைக்கும். அதாவது முடி உதிர்வு பிரச்சனை நீங்கி முடி நீளமாகவும்,
அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும். இளநரை பிரச்சனை சரி ஆகும்.