Advertisement

பருக்கள் வருவதைத் தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்!

By: Monisha Wed, 16 Dec 2020 11:07:00 AM

பருக்கள் வருவதைத் தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்!

பெண்கள் மற்றும் ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் பொதுவான ஒன்று முகப்பருக்கள். இவை முகத்தினை மிகவும் பொலிவிழந்தவாறு வெளிப்படுத்தும். அதுமட்டுமின்றி, கடுமையான வலியையும் உண்டாக்கும். இந்த பதிவில் பருக்கள் வருவதைத் தடுக்க என்ன செய்வது என்று தெரிந்துகொள்வோம்.

பொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குத் தான் பருக்கள் அதிகம் வரும். ஏனெனில் அவர்களின் முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பதால், தூசிகள் சருமத்தில் படிந்து, சரும துளைகளை அடைத்து, அதனால் பருக்களை ஏற்படுத்தும். எனவே இத்தகையவர்கள், தினமும் மூன்று முறை ரோஸ்வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுப்பதுடன், மைல்டு ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். மேலும் தினமும் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி உலர வைத்து கழுவி வாருங்கள். இதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை கட்டுப்படுத்தலாம்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொண்டாலும் முகப்பருக்கள் வரக்கூடும். எனவே எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, தினமும் பழங்களை சாப்பிட வேண்டும்.

face,pimples,skin,water,face wash ,முகம்,பருக்கள்,சருமம்,தண்ணீர்,ஃபேஷ் வாஷ்

கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். இப்படி ஏற்பட்டால், அவை முகத்தில் பருக்களை ஏற்படுத்தும். செரிமான மண்டலம் சீராக இயங்காமல், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைக்கு உள்ளானவர்களுக்கும் முகப்பருக்கள் வரக்கூடும். ஆகவே ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, தினமும் சிறு உடற்பயிற்சியுடன், தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

தலையில் பொடுகு அதிகம் இருந்தால், அந்த பொடுகு முகத்தில் பட்டு பருக்களை ஏற்படுத்தும். எனவே பருக்கள் வருவதை தவிர்க்க வேண்டுமானால், முதலில் தலையை சுத்தமாக பொடுகின்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

சிலர் தண்ணீரை மிகவும் குறைவாக குடிப்பார்கள். அத்தகையவர்களுக்கும் முகப்பருக்கள் அதிகம் வரக்கூடும். எனவே தண்ணீரை அதிகம் குடித்து பருக்கள் வருவதைத் தவிர்த்திடுங்கள்.

Tags :
|
|
|