Advertisement

ஆண்களே...உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள்!!

By: Monisha Thu, 21 May 2020 12:57:27 PM

ஆண்களே...உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள்!!

ஒரு பௌலில் சிறிது கற்றாழை ஜெல்லுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்.

mens beauty,skin,refreshing,cactus gel,face pack ,ஆண்கள் அழகு,சருமம்,புத்துணர்ச்சி,கற்றாழை ஜெல்,ஃபேஸ் பேக்

கற்றாழை ஜெல்லை அத்துடன் சிறிது மாம்பழக் கூழ் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பிளெண்டரில் போட்டு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு முகத்தை நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கால் முகம் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, பிரகாசமாகவும் இருக்கும்.

mens beauty,skin,refreshing,cactus gel,face pack ,ஆண்கள் அழகு,சருமம்,புத்துணர்ச்சி,கற்றாழை ஜெல்,ஃபேஸ் பேக்

கற்றாழை ஜெல்லுடன், சிறிது வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். அதன் பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினந்தோறும் செய்து வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

Tags :
|