- வீடு›
- அழகு குறிப்புகள்›
- சருமத்திற்கு எண்ணற்ற நன்மைகள் தரும் க்ரீன் டீ பேஸ் பேக்ஸ்
சருமத்திற்கு எண்ணற்ற நன்மைகள் தரும் க்ரீன் டீ பேஸ் பேக்ஸ்
By: Nagaraj Sun, 06 Nov 2022 00:14:22 AM
சென்னை: க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஃப்ளேவோனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் எண்ணற்ற நன்மைகளைத் தருகின்றன.
மேலும் க்ரீன் டீயில் டானிக் ஆசிட் நிறைந்திருப்பதால், சரும சுருக்கங்கள், கரும்புள்ளிகள், பொலிவிழந்த சருமம் போன்றவற்றை தடுப்பதில் சிறந்தது. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய க்ரீன் டீயை பயன்படுத்தி எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
க்ரீன் டீ & மஞ்சள் தூள் – நார்மல் சருமத்திற்கு மஞ்சள் தூளுடன், 1 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து பேக் போட வேண்டும். சுமார் 15 – 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். மஞ்சளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு போன்ற பிரச்சினைகளை சரிசெய்யும்.
க்ரீன் டீ & ஆரஞ்சு தோல் பவுடர் – 1 டீஸ்பூன் கிரீன் டீ, 1 டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடரை எடுத்து அதனுடன் ½ தேக்கரண்டி தேன் கலந்து நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தின் அப்ளை செய்து உலர்ந்தவுடன் கழுவ வேண்டும். ஆரஞ்சு தூள் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, முகப்பரு வடுக்களை மறைந்து போக செய்கிறது. மேலும் தேன் உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.
க்ரீன் டீ & முல்தானி மெட்டி – எண்ணெய் பசை சருமத்தால்
அவதிப்படுபவர்கள் 1 ஸ்பூன் முல்தானி மெட்டியுடன், 2 ஸ்பூன் கிரீன் டீ
கலந்து முகம் மற்றும் கழுத்தில் பேக் போட வேண்டும். முல்தானி மெட்டியில்
அதிகளவிலான தாதுக்கள் நிறைந்துள்ளதால் இது உங்கள் சருமத்திலிருந்து
அதிகப்படியான எண்ணெய்களை உறிஞ்சி உடனடி பிரகாசத்தை தருகிறது.
க்ரீன்
டீ & மில்க் க்ரீம் – உங்கள் முகத்தில் வறட்சி அதிகம் இருந்தால் 1
டீஸ்பூன் மில்க் க்ரீம், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனுடன் 1-2
டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து முகத்தில் தடவி பேக் போட்டு நீரில்
கழுவ வேண்டும்.
க்ரீன் டீ & தேன் 2 டீஸ்பூன் –
க்ரீன் டீயுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 15
நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். க்ரீன் டீயில் சரும
செல்களைப் பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளதால்
சருமம் பொலிவாகும்.