Advertisement

கண்களை பராமரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ

By: vaithegi Sat, 21 Oct 2023 4:13:27 PM

கண்களை பராமரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ


இன்றைய நவீன காலத்தில் கண்களுக்கு மிக அதிகமான வேலை கொடுக்கிறோம். குறிப்பாக செல்போன் பார்ப்பது ,லேப்டாப், தொலைக்காட்சி போன்ற மின் சாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்துகிறோம். இதனால் கண்களில் உள்ள கண்ணீர் சுரப்பி மிக பாதிப்படைகிறது திரவ குறைபாடு, கண் அலர்ஜி ,பார்வை குறைபாடு, கண் வறட்சி போன்றவை ஏற்படுகிறது.

வேலையின் நிமித்தம் நீண்ட நேரம் நாம் மின் சாதன பொருள்களை பார்க்கிறோம் என்றால் அதற்கான கண் கண்ணாடி வகைகளை பயன்படுத்த தவற வேண்டாம். இருளில் நீண்ட நேரம் மின் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். கண் ஆரோக்கியத்துக்கு ஒரு என ஒரு சில உணவுகள் இருக்கிறது. மீன் கடல் சார்ந்த உணவுகளை பயன்படுத்துவது சிறந்தது அதில் ஒமேகா 3 ஆசிட் அதிகம் உள்ளது. ஒமேகா 3 ஆசிட் அதிகம் உள்ள பொருள்களான உணவுகளை நாம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் விட்டமின் ஏ அதிகம் நிறைந்த உணவுகளான பப்பாளி ,,கேரட் நம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் .மேலும் இது கண் வரட்சியாகாமல் இருக்க உதவுகிறது.

இதையடுத்து அனைத்து விதமான பச்சை நிற காய்கறிகளில் மல்டி நியூட்ரியன்ட்ஸ் அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக பசலைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை அகத்திக்கீரை போன்றவை கண்களுக்கு மிகவும் நல்லது இதை வாரத்திற்கு 2 முறை அதிலும் முறை எடுத்துக் கொள்வது கண்ணிற்கு ஆரோக்கியத்தை தரும்.

முட்டையின் வெள்ளை கருவை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் இது கண் பார்வை திறனை அதிகரிக்கும். மேலும் சிறு தானியங்களையும் உணவில் அடிக்கடி பயன்படுத்த வேண்டும் குறைந்த அளவு கிளைசிமிக் இதில் அதிகம் உள்ளது மேலும் நியாஸின், சிங்க் அதிகம் நிறைந்துள்ளது இது கண் கருவிழி ரெட்டினாவுக்கு மிக ஆரோக்கியமானது.

tips,eye ,டிப்ஸ் , கண்

வெள்ளரிக்காய்களை துண்டாக நறுக்கி கண்களின் மேல் வைத்தால் கருவளையம் கண் வறட்சி நீங்கும் மேலும் கண்களுக்கு குளிர்ச்சியை தரும். வெள்ளரிக்காய் கிடைக்காவிட்டால் உருளைக்கிழங்கை அதற்கு பதிலாக பயன்படுத்தலாம்.அடிக்கடி ஐஸ் டூ பை கண்ணிற்கு ஒத்தடம் கொடுக்கலாம். விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவு எடுத்து கண்ணைச் சுற்றி இரவு நேரங்களில் போட்டு வரலாம்.

விளக்கெண்ணையை கண்மை போடும் இடத்தில் இரவில் தினமும் போட்டு வரவும் இதனால் கண் வறட்சி கருவளையம் வருவதை தடுக்கும். ஆகவே இம்முறைகளை பயன்படுத்தி கண்களை நாம் கருத்தாக பராமரித்து வர வேண்டும். கண்களுக்கு அதிக ஒளி கொடுக்காமல் பார்த்துக் கொள்வது சிறந்தது.

Tags :
|