Advertisement

கருவளையத்தைக் காணாமல் போகச் செய்ய சில யோசனைகள் உங்களுக்காக!!!

By: Nagaraj Thu, 27 July 2023 11:11:56 PM

கருவளையத்தைக் காணாமல் போகச் செய்ய சில யோசனைகள் உங்களுக்காக!!!

சென்னை: கண்களில் கருவளையம் ஏற்படக் காரணம் தூக்கமின்மை, மன அழுத்தம், கவலை, மனச்சோர்வு, முதுமை, டீஹைட்ரேஷன், உணவில் அதிக உப்பு சேர்ப்பது போன்றவையே.

கருவளையத்தைக் காணாமல் போகச் செய்ய சில யோசனைகள். 2 துண்டு வெள்ளரிக்காயில், அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து கழுவினால் நாளடைவில் கருவளையம் மறைந்து போகும்

buttermilk,egg yolks,eyes,paste,turmeric powder ,கண்கள், கருவளையங்கள், பேஸ்ட், மஞ்சள் தூள், மோர்

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு கலந்து கண்களுக்கு கீழே, ஒரு நாளுக்கு இரு முறை தடவி வந்தால், கருவளையம் மறைய ஆரம்பிக்கும்.

பாதாம் எண்ணெயை கண்ணுக்கு அடியில் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி வந்தால், கருவளையம் மறையும். உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, பஞ்சில் தொட்டுஇரவில் தூங்கும் முன்பு கண்ணைச் சுற்றி தடவி உலரவிட்டு, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவ வேண்டும். ஒரு சில வாரங்களில் கண் கருவளையம் மறைந்து விடும்.

சோற்றுக் கற்றாழையின் தோலையும் முள்ளையும் அகற்றிவிட்டு அதன் ஜெல்லை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்து பிறகு சுத்தமான பஞ்சினால் துடைத்து வந்தால் கருவளையம் மறையும்.

Tags :
|
|