Advertisement

பருக்கள் மறைந்து முகம் அழகாக பளிச்சென்று பொலிவு பெற சில யோசனைகள்

By: Nagaraj Sat, 14 Oct 2023 4:55:40 PM

பருக்கள் மறைந்து முகம் அழகாக பளிச்சென்று பொலிவு பெற சில யோசனைகள்

சென்னை: அழகான முகம்... மாசில்லாத முகம் இதுதான் அனைவரின் விருப்பம். இதை எளிமையாக நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே பொலிவு பெறலாம்.

முகப்பருதான் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது. இதை எளிமையாக தீர்க்க ஏராளமான வழிகள் இருக்கு. மிகவும் சிம்பிளாக சீரகத்தை அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தால் முகப்பரு மறைந்து விடும்.

குங்குமப்பூவை பாலிலை அரைத்து முகப்பரு மீது பூசி வந்தால் போது நாளடைவில் முகமும் ஜொலிக்கும். முகப்பருவும் மறைந்து விடும்.

feet,beauty,shine,clay,pimples,disappear ,பாதம், அழகு, ஜொலிக்கும், களிமண், பருக்கள், மறையும்

கசகசா மசாலா பொருள் என்றுதான் நினைத்து கொள்கிறோம். ஆனால் அது மருத்துவ குணம் நிறைந்தது. கசகசாவில் எலும்மிச்சை பழச்சாறை கலந்து மைபோல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை தொடர்ந்து முகப்பரு மேல் தடவி வந்தால் போதும். முகப்பரு மறைவது மட்டுமின்றி முகம் "பளிச்"சென்று பொலிவு பெறும்.

சிறிது சந்தனம், மிளகு, சாதிக்காய் எடுத்துக் கொள்ளுங்க...இதை அரைத்து ஒருவாரம் முகத்தில் பற்று போட்டால் முகப்பரு நீங்கும். இதேபோல் ஜாதிக்காயை அரைத்து தினமும் பூசிவந்தால் சில நாட்களிலேயே முகப்பருவால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறைந்து முகம் நன்றாக ஜொலிக்கும்.

களிமண்ணை சிறிதளவு தண்ணீர் விட்டு பற்பசை போல் குழைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் பாதங்களிலும், உள்ளங்கால்களிலும் நன்றாக பூசிக் கொள்ளுங்கள். 10 நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் நன்கு கழுவினால் போது மிருதுவான பாதமாக மாறிவிடும். இதை மாதம் ஒருமுறை செய்தால் காலில் ஆணி இருந்தாலும் நாளடைவில் மறைந்து பாதம் அழகு பெறும்.

Tags :
|
|
|
|