- வீடு›
- அழகு குறிப்புகள்›
- வெயிலால் உடலில் ஏற்பட்ட கருமையை போக்க சில எளிய தீர்வுகள்
வெயிலால் உடலில் ஏற்பட்ட கருமையை போக்க சில எளிய தீர்வுகள்
By: Nagaraj Thu, 15 Dec 2022 11:31:40 PM
சென்னை: சிலரது முகம் வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால், கை கால்கள் மற்றும் கழுத்து போன்றவை அதற்கு எதிர்மாறாக இருக்கும். காரணம் நாம் வெயிலில் அதிகமாக செல்லும்போது, நாம் ஆடை அணிந்திருக்கும் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெயில் படுவதால் கருப்பாக தெரிகிறது.
தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமையை படிப்படியாகப் போக்கலாம்.
தக்காளியை வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடம்
ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் கைகளில்
உள்ள கருமையை மறைக்கும். பாதாமை இரவில் படுக்கும் போது சிறிது பாலில் ஊற
வைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, கைகளில்
தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும்.
பப்பாளியை
அரைத்து அந்த பேஸ்ட்டை கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர,
கைகள் வெள்ளையாகும். மஞ்சள் தூளில் சரிசம அளவில் பால் மற்றும் எலுமிச்சை
சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து கழுவினால்,
வெயிலால் கருமையடைந்த கைகளை வெள்ளையாக்கலாம். கற்றாழை ஜெல்லை தினமும்
கைகளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கலாம்.