Advertisement

முகக்கருமை நீங்கி வெள்ளையாக மாற சில இயற்கை வழிமுறைகள்!

By: Monisha Mon, 13 July 2020 11:42:17 AM

முகக்கருமை நீங்கி வெள்ளையாக மாற சில இயற்கை வழிமுறைகள்!

இன்று இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இதற்கு தீர்வு தேடி தேடி அலைபவர்கள் அதிகமானோர். இதற்கு நாம் செயற்கையான முறையில் தீர்வு காணாமல், இயற்கையான முறையில் தீர்வு காண்பது தான் சிறந்தது. இயற்கையான முறையில், முகக்கருமை நீங்கி பளிச்சுனு வெள்ளையாவதற்கான வழிகளை பற்றி பாப்போம்.

குங்குமப்பூ:
முகக்கருமை நீங்கி வெள்ளையாக நினைப்பவர்கள், குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் கூடுகிறது.

துளசி: பல மருத்துவக் குணங்களைக் கொண்ட சிறந்த மூலிகை துளசி ஆகும். இது சரும பிரச்சனைகளை போக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முக கருமை நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.

face,beauty,saffron,basil,potatoes ,முகக்கருமை,அழகு,குங்குமப்பூ,துளசி,உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு: சருமப் பிரச்சனைகளை போக்காக கூடிய ஆற்றல் உருளைக்கிழங்கில் அதிகமாக உள்ளது. உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் தன்மை சரும பிரச்சனைகளை நீக்கக் கூடிய தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு காணப்படும்.

ஓட்ஸ்: சரும பொலிவை பெற விரும்புபவர்கள், ஓட்ஸை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் காலை அதனை அரைத்து, புளித்த தயிரினை அதனோடு சேர்த்து, தினமும் காலையில் அதனை முகத்தில் தடவி வந்தால் மிகக் கருமை நீங்கி பொலிவுடன் காணப்படும்.

பால்பவுடர்: மிகக் கருமையை போக்க விரும்புபவர்கள், பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் பொலிவை நாமே நம் கண்களால் காணலாம்.

Tags :
|
|
|