Advertisement

முகத்தின் பொலிவை அதிகரிக்க செய்யும் பொருட்கள்!

By: Monisha Fri, 24 July 2020 3:05:30 PM

முகத்தின் பொலிவை அதிகரிக்க செய்யும் பொருட்கள்!

உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முழுமையாக நீக்க சமையலறையில் உள்ள பொருட்களையே பயன்படுத்தலாம். சுலபமாக முகத்தின் பொலிவை அதிகரிக்க செய்யும் பொருட்களை தெரிந்து கொள்வோம்.

உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது ஆரோக்கியமான தோலை தருகிறது.

காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர அதாவது மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் சுருக்கங்கள் மறையும். ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

face,beauty,dead cells,potatoes,honey ,முகம்,அழகு,இறந்த செல்கள்,உருளைக்கிழங்கு,தேன்

முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஒரு முழு தேக்கரண்டி பாதாம் ஆயிலை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகச்சுருக்கம் உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும். தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்பு பாதாம் ஆயிலை முகத்தில் தடவி குளித்து வர நாளடைவில் முகம் பொலிவு பெறும்.

ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோஸின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்சியளிக்கும்.

Tags :
|
|