Advertisement

இளமையை தக்க வைத்துக் கொள்ள இதை மட்டும் செய்தால் போதும்!

By: Monisha Sat, 21 Nov 2020 5:13:03 PM

இளமையை தக்க வைத்துக் கொள்ள இதை மட்டும் செய்தால் போதும்!

உங்கள் முகத்தை அழகான முகமாக மாற்ற சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. முகத்திற்கு ஆவி பிடிப்பதால் சருமம் பொலிவு பெறுவதுடன், இளமையையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.

ஒரு பாத்திரத்தில் சூடான நீரை எடுத்து கொள்ளுங்கள். பின்பு ஒரு போர்வையால் உங்களை போர்த்திக்கொண்டு, அந்த போர்வைக்குள் சுடு நீரையும் வைத்துக்கொண்டு, போர்வைக்குள் இருந்தபடியே அந்த நீரின் முன் உங்கள் முகத்தை வையுங்கள். அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை அப்படியே உட்கார்ந்து ஆவி பிடிக்க வேண்டும். ஆவி பிடித்து முடித்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்து விடும்.

youth,face,beauty,spirit,dead cells,skin ,இளமை,முகம்,அழகு,ஆவி பிடித்தல்,இறந்த செல்கள்,சருமம்

முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்க இந்த முறை மிகவும் சிறந்ததாகும். ஆவி பிடிக்கும் போது சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் எளிதில் வந்து விடும். அப்போது முகம் பளிச்சென்று தோற்றமளிக்கும்.

சுடு நீரால் ஆவி பிடிக்கும்போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் விரைவில் நீங்கிவிடும். மூக்கில் உள்ள சரும துளைகளில் காணப்படும் சிறுசிறு வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அது வேரோடு வந்து விடும். இவ்வேளையில் முகம் பளபளவென்று காட்சியளிக்கும்.

முகத்திற்கு சுடுநீரால் ஆவி பிடிப்பதால் முகப்பருக்கள் குறையும். ஏனெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருக்கும். இவ்வேளையில் சரும துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்சின்களால் முகப்பருக்கள் ஏற்படும்.

youth,face,beauty,spirit,dead cells,skin ,இளமை,முகம்,அழகு,ஆவி பிடித்தல்,இறந்த செல்கள்,சருமம்

இவை ஆவி பிடித்தப்பின் துணியால் முகத்தை துடைக்கும் போது போய்விடும். முகத்தில் முகப்பரு இருக்கும் போது 5 நிமிடங்கள் ஆவி பிடித்தால் போதும். 5 நிமிடங்கள் ஆவி பிடித்த பிறகு 30 நிமிடம் கழித்து ஐஸ் கட்டிகளால் தேய்த்தால், முகப்பரு உடைந்து விடும். அப்படியே முகப்பரு குறைய ஆரம்பிக்கும். முகம் அழகாக காணப்படும்.

சூடான தண்ணீரால் ஆவி பிடித்தால் முதுமை தோற்றத்தை தடுக்கலாம். எப்படியெனில் ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சென்று, இளமை தோற்றத்தை தரும். ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். இப்போது சருமம் நன்கு அழகாக பொலிவோடு காணப்படும்.

Tags :
|
|
|
|