- வீடு›
- அழகு குறிப்புகள்›
- சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எலுமிச்சை
சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எலுமிச்சை
By: Nagaraj Tue, 20 Dec 2022 10:31:53 PM
சென்னை: இயற்கை அழகு குறிப்பில் எலுமிச்சைக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. எலுமிச்சையில் நிறைந்துள்ள உள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளிள், புற ஊதா கதிர்கள் சேதத்திலிருந்து நமது சருமத்தை பாதுகாக்கிறது.
உலர்ந்த சருமத்தை ஈரப்பதமாக்குவதில் எலுமிச்சை சாறு உதவி புரிகிறது. இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் செழுமை வறண்ட சருமத்தை சரி செய்து, இயற்கையான பளபளப்பை தருகிறது. இதற்கு சம அளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, உலர்ந்த சரும பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் நன்றாக கழுவவும்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சற்றை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவிட வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு தொடர்ந்து செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
எலுமிச்சையை வைத்து ஃபேஷியல் கூட செய்யலாம். அதற்கு ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றுடன், 1/4 கப் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய்யை சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஃபேஷியல் செய்தால், சருமம் பொலிவாவதோடு, ஈரப்பசையுடனும் இருக்கும்.பச்சை மிளகாயில் உடலுக்கு தேவையான அதிக சத்துக்களும் நிறைந்துள்ளது.
இதில் வைட்டமின்-சி சத்து உள்ளது. மேலும் இது நோயெதிர்ப்பு
சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. பச்சை மிளகாயை என்னதான் ப்ரிட்ஜில்
வைத்து பாதுகாத்தாலும் கூட அவை சில தினங்களில் அழுகி போய்விடும்.
பெரும்பாலான இந்திய உணவுகளில் பச்சை மிளகாய் அதிகம் சேர்க்கப்படுகிறது.
பச்சை
மிளகாயை சுத்தமாக கழுவி காற்றுபுகாத பாட்டிலில் ஒன்றின் அடியில் டிஸ்யூ
பேப்பரை வைத்து அதன்மீது பச்சை மிளகாயை வைத்து, மேற்பரப்பில் மற்றொரு
டிஸ்யூ பேப்பரை வையத்து இறுக்கமாக மூடிவிட வேண்டும். பச்சை மிளகாயை இப்படி
நீங்கள் பாதுகாத்து வந்தால் ஒரு மாதம் வரையிலும் கெட்டுப்போகாமல் புதிது
போன்றே வைத்திருக்கலாம். அதேசமயம் வாரத்திற்கு ஒரு முறை பாட்டிலில்
வைக்கப்பட்டிருக்கும் டிஸ்யூ பேப்பரை மாற்றிக்கொள்ளவேண்டும்.
பச்சை
மிளகாய் மட்டுமல்ல இதே முறையை பயன்படுத்தி நீங்கள் புதினா இலைகள்,
கொத்தமல்லி தழை மற்றும் தக்காளி போன்ற எளிதில் கெட்டுப்போகும்
பொருட்களையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். பச்சை மிளகாயை சுத்தமாக
கழுவியெடுத்து வைத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பேஸ்ட்
போல செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது அந்த அரைத்தெடுத்த பச்சை
மிளகாய் பேஸ்ட்டை ஒரு ட்ரேயில் மாற்றிக்கொள்ள வேண்டும், பின்னர் உணவு
பொருட்களை மூட பயன்படுத்தப்படும் க்ளிங் பிலிம் எனும் பேப்பரை கொண்டு அந்த
ட்ரேயை மூடி வைத்துவிட வேண்டும்.