- வீடு›
- அழகு குறிப்புகள்›
- பாத அழற்சியை போக்கும் வழிமுறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்
பாத அழற்சியை போக்கும் வழிமுறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்
By: Nagaraj Thu, 24 Nov 2022 3:38:24 PM
சென்னை: பாத அழற்சி குறித்தும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும், அதை சரி செய்ய பின்பற்ற வேண்டிய தீர்வுகள் குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள். பாதத்தின் தசை நாண்களில் ஏற்படும் வீக்கம் அல்லது கட்டி பாத அழற்சி என்று குறிப்பிடப்படுகிறது. இது வீக்கம், சிவந்து போதல், எரிச்சல் ஆகியவற்றோடு தொடர்புடைய தீவிர வலி கொண்ட நிலையாகும்.
பாதத்தின் மீது ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக இது ஏற்படுகிறது. சில நேரங்களில், இது பொருந்தாத அளவு கொண்ட காலணி, உடல் பருமன், அடிப்பாதத்தில் முள், நீரிழிவு ஆகியவற்றின் காரணமாகவும் ஏற்படுகிறது.
எண்ணெய் மசாஜ் சிறிதளவு எண்ணெயை எடுத்து பாதத்தின் வலி கொண்ட இடத்தில் மசாஜ் செய்யும் போது நிவாரணம் கிடைக்கிறது. சிறந்த பலன் பெற ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம். இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை எடுத்து கொண்டு அதனை மிதமாக சூடுப்படுத்தி, வலி உள்ள இடத்தில் சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம்.
இவ்வாறு மசாஜ் செய்யும் போது பாதிக்கபட்ட இடத்தை சுற்றியுள்ள இரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது மற்றும் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கிறது. வலி குறையும் வரை இதை தொடர்ந்து பல நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம்.
ஐஸ் பேக் பாதத்தில் பாத அழற்சியால் ஏற்பட்ட வீக்கத்தினை மற்றும் வலியை
குறைக்க ஐஸ் பேக்கை பயன்படுத்துவது வீட்டிலேயே செய்ய கூடிய சிறந்த
தீர்வாகும். சில ஐஸ் கட்டிகளை எடுத்து நசுக்கி ஒரு பையினுள் போட்டு ஒரு
பருத்தி துண்டினை கொண்டு சுற்றி எடுத்து அதனை கொண்டு பாதிக்கப்பட்ட
பகுதியில் சில நிமிடங்களுக்கு ஒற்றி எடுக்க வேண்டும்.
இவ்வாறு
செய்யும் போது கட்டியும் வீககமும் குறையும். ஒரு முறை தயார் செய்யும் பையை
சில நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம். இத்தனை ஒரு நாளில் பல முறை செய்து
பாதத்தில் ஏற்பட்டுள்ள வலியை தணிக்கலாம்.
பாத அழற்சியை குணப்படுத்த வெதுவெதுப்பான நீரும், உப்பும் சிறந்த துணை
புரிகிறது. உப்பு கரைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீரில் பாதத்தினை 10-15
நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் பாதிக்கப்பட்ட
இடத்தின் வலியை ஆச்சரியத்தக்க வகையில் குறைக்கிறது. மேலும் உப்பு நம் உடல்
இழந்த மெக்னீசியத்தின் அளவை மீட்டு தருகிறது. பாதம் வறட்சி கொள்வதை
தடுப்பதற்காக இந்த முறையை ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே செய்யுமாறு
பரிந்துரைக்கப்படுகிறது. இதனை செய்து முடித்த பின் பாதத்தினை ஈரப்படுத்திக்
கொள்ள வேண்டும்.
பாத அழற்சியினால் ஏற்பட்ட
வலியையும், வீக்கத்தினையும் குறைக்க வினிகர் சிறந்த துணை புரிகிறது. சூடான
மற்றும் குளிர்ந்த வினிகரை கலந்து எடுத்து இப்பிரச்சனைக்கு சிகிச்சை
அளிக்கலாம். நீரையும் வினிகரையும் சம அளவு கலந்து எடுத்து கொண்டு சில
நிமிடங்களுக்கு சூடாக்கி பின் ஒரு பருத்தி துணியை அதனுள் மூழ்க செய்து
எடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும்.
இப்பொழுது
சம அளவு வினிகர் மற்றும் குளிர்ந்த நீரை எடுத்து இந்த கரைசலை ஒரு பருத்தி
துணியின் உதவி கொண்டு பாதத்தில் ஒற்றி எடுக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்டவற்றை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து
நிவாரணம் பெறலாம்.