Advertisement

பாதங்களுக்கு தினமும் ஆயுர்வேத எண்ணெய் மசாஜ் செய்வதால் சிறந்த நன்மை கிடைக்கும்

By: Nagaraj Mon, 11 Sept 2023 10:34:32 AM

பாதங்களுக்கு தினமும் ஆயுர்வேத எண்ணெய் மசாஜ் செய்வதால் சிறந்த நன்மை கிடைக்கும்

சென்னை: பாதங்களுக்கு ஆயுர்வேத எண்ணெய் மசாஜ்....நம் உடலின் ஒவ்வொரு பகுதிகளும் அதற்கான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அந்த வகையில் பாதங்களும் முக்கியதுவத்தை பெற்றுள்ளது.

பாதங்களுக்கு நாம் தினமும் எண்ணெய் மசாஜ் செய்வதினால் நம் உடலில் ஏராளமான நன்மைகள் நிகழும். குறிப்பாக ஆயுர்வேத எண்ணெயினை பயன்படுத்தி பாதங்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதினால் நரம்பு அழுத்தம் நீக்கப்பட்டு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

மருத்துவ சிகிச்சையில் மிகவும் பயனுள்ள ஓர் சிகிச்சைதான், மசாஜ் தெரபி. அதாவது உடலில் சில பகுதிகளில் அழுத்தம் கொடுப்பதினால் டென்சன் குறைவதோடு, மன அழுத்தம் நீங்கி மனம் ரிலாக்ஸ் அடைகிறது. மசாஜ் தெரபியில் ஒரு பகுதி தான் ரிப்ளக்ஸாலஜி என்னும் பாத அழுத்த முறை.

foot massage,ayurvedic oil,benefits,pregnant women ,பாத மசாஜ், ஆயுர்வேத எண்ணெய், பயன்கள், கர்ப்பிணிகள்

தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களுடன் நேரடி தொடர்புடைய பல்வேறு உடலுறுப்புக்களில் உள்ள பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். முக்கியமாக கர்ப்பிணிகள் இரவில் படுக்கும் போது பாத மசாஜ் செய்து வந்தால், உடலில் நீர்த்தேக்கத்தில் ஏற்படும் கால் வீக்கத்தைத் தடுக்க முடியும். உதாரணமாக, காலின் பெருவிரலோடு மூளை மற்றும் நுரையீரல் நேரடி தொடர்புக் கொண்டுள்ளது.

எனவே பெருவிரலில் மசாஜ் செய்தால் மூளை மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும். காலின் இரண்டாம், மூன்றாம், நான்காம் விரல்களில் கொடுக்கப்படும் அழுத்தம் பல் வலிக்கு உடனடி நிவாரணம் தரும். கடைசி சிறு விரல் காது வலியைக் குறைக்கும்.

Tags :