Advertisement

ஒரு வாரத்திலேயே சொட்டை தலையில் புது முடி வேகமாக வளர..!

By: Monisha Fri, 16 Oct 2020 1:22:55 PM

ஒரு வாரத்திலேயே சொட்டை தலையில் புது முடி வேகமாக வளர..!

பொதுவாக எல்லோருக்கும் கூந்தல் என்றாலே ரொம்ப பிடிக்கும். கூந்தல் அடர்த்தியாக கருமையாக இருந்தால்தான், இளமையான தோற்றமுடன் காணப்படுவோம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் அழகை சேர்ப்பதே முடி தான். தலையில் சொட்டை விழுந்தால் 35 வயதிலும் 45 வயது போல் தோற்றமளிக்கும்.

முடி உதிர்ந்து சொட்டை தலையுடனும், அடர்த்தியற்றும் காணப்படுவதை ஒரு பைசா கூட செலவில்லாமல் சரி செய்யலாம். இதற்கு அரிசி கழுவிய நீர் மட்டும் இருந்தால் போதும். ஒரு வாரத்திலேயே புது முடி வேகமாக வளர ஆரம்பிக்கும். இது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

நாம் சாதாரணமாக அரிசி கழுவிய நீரை வீணாக வெளியே கொட்டி விடுகிறோம். ஆனால் எண்ணற்ற பயன்கள் இந்த நீரில் உள்ளது. அரிசியை நாம் சமையலுக்கு பயன்படுத்தும் போது ஊற வைத்து, நன்றாக கழுவித்தான் பயன்படுத்துகிறோம். அரிசியை ஊற வைத்த அந்த நீரில் அதிகளவிலான ஸ்டார்ச் காணப்படும்.

scalp,rice wash water,starch,beauty,hair ,சொட்டை,அரிசி கழுவிய நீர்,ஸ்டார்ச்,அழகு,கூந்தல்

இந்த ஸ்டார்ச் முடி நன்றாக வளர்வதற்கும் சருமத்திற்கும் ஏராளமான பலன்களைத் தருகிறது. மட்டுமல்லாது அரிசி கழுவிய நீரில் அதிகம் இனோசிட்டால் ( inosital ) காணப்படுவதாகவும், இந்த இனோசிட்டால் சேதமடைந்த முடியை சரி செய்து, முடி நன்கு வளர்வதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அழகு சாதனப் பொருள் தயாரிக்கும் ஆராய்ச்சியில் தெரிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் அரிசியை கழுவிவிட்டு, பின் கழுவிய அரிசியை ஒரு கப் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை வடிகட்டி பயன்படுத்தலாம். எப்படியெனில் நீங்கள் ஷாம்பு பயன்படுத்துவது போல் இந்த நீரையும் பயன்படுத்த வேண்டும்.

அரிசி ஊற வைக்கும்போது எந்த அரிசியையும் பயன்படுத்தலாம். ஆனால் அரிசியை ஊற வைக்கிறதற்கு முன்னாடி இரண்டு தடவை கழுவிட்டு ஊற வைக்க வேண்டும். இந்த தண்ணீரை 24 மணிநேரத்திற்கு புளிக்க வைக்க வேண்டும். இந்த நீரை நேரடியா பயன்படுத்துவதை விட, இப்படி புளிக்க வைத்து பயன்படுத்தும் போது நிறைய மருத்துவ குணங்கள் நமக்கு கிடைக்கும்.

Tags :
|
|
|