- வீடு›
- அழகு குறிப்புகள்›
- ஆரஞ்சு தோல் போதுமே உங்கள் அழகை அதிகரிக்க!!! செய்து பாருங்கள்!!!
ஆரஞ்சு தோல் போதுமே உங்கள் அழகை அதிகரிக்க!!! செய்து பாருங்கள்!!!
By: Nagaraj Mon, 24 July 2023 11:05:45 PM
சென்னை: பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தினை அழகுபடுத்த பல்வேறு பவுடர்கள் மற்றும் ஸ்கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள்.
அதனால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இயற்கையாக ஆரஞ்சு தோலில் முகத்தை அழகுபடுத்தும் தன்மையுள்ளது.
அவ்வாறு ஆரஞ்சு தோல் சரும செல்களை புதுப்பிக்க உதவும். இது சிறந்த ஸ்க்ரப்பர் கூட. சிறிது ஆரஞ்சு பொடியில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கழுத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் கருமை நீங்கும்.
4 முதல் 5 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை, ஒரு தேக்கரண்டி நீருடன் கலந்து இது போன்று செய்து, கழுத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். அதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமை நீங்கும். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தாலே போதும் முகம் பளபளப்பாக மாறும்.