- வீடு›
- அழகு குறிப்புகள்›
- தலைமுடி உதிர்வுக்கு தீர்வை அளிக்கும் செம்பருத்தி சீரம்
தலைமுடி உதிர்வுக்கு தீர்வை அளிக்கும் செம்பருத்தி சீரம்
By: Nagaraj Sun, 13 Dec 2020 8:11:22 PM
செம்பருத்தி தலைமுடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் முடி உதிர்தல் உட்பட பல பிரச்னைகளுக்கு தீர்வை அளிக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த செம்பருத்தியில் சீரம் எப்படி செய்வது என்றும் அதனை எப்படிப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.
தேவையானவை:
செம்பருத்திப் பூ- 3
தயிர்- 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 3 ஸ்பூன்
செய்முறை: செம்பருத்திப் பூவின் இதழ்களைப் பிரித்து எடுத்துக்
கொள்ளவும். அடுத்து தண்ணீரில் செம்பருத்தி இதழ்களைப் போட்டு நன்கு
கொதிக்கவிடவும். அடுத்து தண்ணீர் முழுவதுமாகக் கலர் மாறியதும் தயிர்
மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளவும்.
இந்த செம்பருத்தி
சீரத்தினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் அப்ளை செய்து சீயக்காய்
கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வானது கட்டுக்குள் வரும்.