- வீடு›
- அழகு குறிப்புகள்›
- சரும பாதுகாப்பிற்கு பக்கபலமாக விளங்கும் அரிசி கழுவிய நீர்
சரும பாதுகாப்பிற்கு பக்கபலமாக விளங்கும் அரிசி கழுவிய நீர்
By: Nagaraj Wed, 30 Sept 2020 11:59:18 AM
அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால், பல பிரச்சினைகள் தடுக்கலாம். அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து அதனால் முடி பாதிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படுகிறது. கழுவிய அரிசியின் நீரில் உள்ள பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை சுத்தமான நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, அந்த நீரை வடிகட்டி சேகரித்து, அந்நீரால் முகம் மற்றும் கூந்தலைப் பராமரித்து வரலாம். அரிசி கழுவிய நீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படுகின்றன.
இதற்கு பருத்தி துணியை அரிசி கழுவிய நீரில் நனைத்து, பின் அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்கலாம். அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் பிரகாசிக்கும். இதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவலாம்.
கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய
நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான
குளிர்ந்த நீரில் கூந்தலை அலசலாம். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை
அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாத்து விடலாம்.
அரிசி
கழுவிய நீர் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, அதனைக் குடித்தால், உடலின்
ஆற்றலும் அதிகரிக்குமாம். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட்டுகளும், மற்ற
ஊட்டச்சத்துக்களும் வளமாக நிறைந்து காணப்படுகிறது.