Advertisement

எண்ணற்ற அழகு பயன்களை கொண்டிருக்கும் அரிசி நீர்!

By: Monisha Thu, 27 Aug 2020 5:38:02 PM

எண்ணற்ற அழகு பயன்களை கொண்டிருக்கும் அரிசி நீர்!

அரிசி நீர், இப்போது அழகு சாதன துறையில் அதிகம் பேசப்படும் பொருளாக இருக்கிறது. இதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. அரிசி நீர் எண்ணற்ற அழகு பயன்களை கொண்டிருக்கிறது. இதைப் பயன்படுத்த துவங்கியதும், அதை தொடர்ந்து பயன்படுத்தும் விருப்பத்தை பெறுவீர்கள்.

உங்கள் உலர் சருமம் கவலை அளிக்கிறதா? அரிசி நீரை பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தின் மேல் பகுதியை நீர்த்தன்மை பெற வைத்து, சரும அணுக்களை புத்துணர்ச்சி பெற வைத்து அதை ஆரோக்கியமாக, நீர்த்தன்மை மிக்கதாக, மென்மையானதாக ஆக்குகிறது.

மங்கலான சருமம், ஈர்ப்புடையதாக இருக்காது. மேலும் குளிர் காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, உங்கள் சருமத்தில் மீண்டும் பொலிவை கொண்டு வந்து அதை மின்னச்செய்ய அரிசி நீரை பயன்படுத்துங்கள். அரிசி நீர், அணுக்கள் வளர்ச்சியை ஊக்குவித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, சருமத்தை மென்மையாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் சருமத்தின் மீது கொஞ்சம் அரிசி நீரை தெளித்து அது காற்றில் உலர அனுமதிப்பது தான். இது மட்டும் போதுமானது.

beauty,rice water,skin,freshness,cleanser ,அழகு,அரிசி நீர்,சருமம்,புத்துணர்ச்சி,கிளின்ஸர்

அரிசி நீரை சருமத்திற்கான டோனராக பயன்படுத்தலாம். இது உங்கள் சரும துளைகளை சுத்தமாக்குவதோடு, அவற்றை சுருக்கு சருமத்தை மேலும் இறுகச்செய்கிறது. முன்கூட்டியே வயதாகும் தன்மையை தாமதமாக்கி, சுருக்கங்கள் மற்றும் கோடுகளையும் தடுக்கிறது.

முகத்தை சுத்தமாக்க, இயற்கையான பேஸ் கிளின்ஸர் தேவை எனில் அரிசி நீர் கைகொடுக்கும். உங்கள் சருமத்தின் மீது கிளின்சராக செயல்பட்டு தூசுகளை அகற்றி, துளைகளை சுத்தமாக்குகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லம் கொஞ்சம் பஞ்சில் அரிசி நீர் நனைத்து உங்கள் முகத்தை அதை கொண்டு துடைத்துக்கொள்ள வேண்டியது தான்.

அரிசி நீரின் அருங்குணம் ரேஷஸ் மற்றும் எக்ஸிமாவை போக்குகிறது. இதில் உள்ள மாவுச்சத்து, சருமத்தை மென்மையாக்கி, புண் பாதிப்பை குறைத்து, கிருமிகளை நீக்குகிறது. அரிசி நீரில் கொஞ்சம் பஞ்சை நனைத்து, சருமத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் 2 அல்லது 3 நிமிடம் தடவவும். தினமும் மூன்று வேளை செய்து வந்தால் நல்ல பலனை உணரலாம்.

Tags :
|
|