- வீடு›
- அழகு குறிப்புகள்›
- புருவங்களை அழகாக்க எளிய இயற்கை வழிமுறைகள் உங்களுக்காக!!!
புருவங்களை அழகாக்க எளிய இயற்கை வழிமுறைகள் உங்களுக்காக!!!
By: Nagaraj Thu, 29 Dec 2022 10:29:24 PM
சென்னை: புருவங்கள் தான் ஒருவரின் முகத்தை அழகாக வெளிக்காட்டுகிறது. சிலருக்கு புருவங்களில் உள்ள முடிகள் அடர்த்தியின்றி இருக்கும். அத்தகையவர்கள் தங்கள் புருவங்களை பென்சில், மை ஆகியவற்றை கொண்டு வரைந்து அழகாக்கி கொள்வார்கள்.
மேலும் சிலர் அழகாக தெரிவதற்காக நிறைய பணம் செலவழித்து நவீன சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். ஆனால் இப்படி பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, வீட்டில் உள்ள சில எளிய பொருட்களைக் கொண்டு புருவங்களை தினமும் மசாஜ் செய்து வந்தால், நிச்சயம் நல்ல அடர்த்தியான புருவத்தை பெறலாம்.
தேங்காய் எண்ணெய்யானது முடியின் வளர்ச்சியைத் தூண்டக்கூடியவை. எனவே இந்த எண்ணெயை தினமும் புருவங்களின் மீது தடவி வர, அந்த பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மயிர்கால்கள் வலுபெற்று புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.
விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது
தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் புருவங்களில் உள்ள முடிகள் நன்கு
அடர்த்தியாக வளரும். இச்செயலை தொடர்ந்து 1 மாதம் பின்பற்றி வந்தால், உங்கள்
புருவ அமைப்பில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். உடலும் குளிர்ச்சி
அடையும்.
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஏ,
பி மற்றும் ஈ அதிகம் உள்ளது. இது முடிக்கு நல்ல ஊட்டத்தை வழங்கி, முடியின்
வளர்ச்சியைத் தூண்டி விடும். தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம்
எண்ணெயை புருங்களில் மென்மையாக தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற
வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் புருவ வளர்ச்சி
தூண்டப்படும்.
கற்றாழை ஜெல்லை இரவு படுக்கும் முன்
புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும்
செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் கண்கூடாக காணலாம்.