Advertisement

கருவளையங்களை அகற்ற சில வீட்டு வைத்தியங்கள் உங்களுக்காக!!!

By: Nagaraj Sat, 03 Sept 2022 10:10:17 AM

கருவளையங்களை அகற்ற சில வீட்டு வைத்தியங்கள் உங்களுக்காக!!!

சென்னை: கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதாலும், போதுமான தூக்கம் இல்லாததாலும் கருவளையம் பிரச்சனை என்பது பொதுவாக அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனையாகி விட்டது. கருவளையங்கள் முக அழகை குலைக்கிறது என்பதோடு, வயதான தோற்றத்தை கொடுக்கிறது.

சில வீட்டு வைத்தியங்களை கடைப்பிடிப்பதன் மூலம் கருவளையத்தை மிக எளிதாக போக்கலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. பக்க விளைவுகள் எதுமின்றி, எளிதான வீட்டு வைத்தியங்கள் மூலம் கருவளையங்களை எவ்வாறு அகற்றுவது என்பதை தெரிந்து கொள்வோம்.

உருளைக்கிழங்கு சாறு: உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. உருளைக்கிழங்கு சாற்றை கண்களுக்குக் கீழே தடவி வந்தால் கருவளையத்தைப் போக்கலாம். இதைப் பயன்படுத்த, உருளைக்கிழங்கை அரைத்து, அதன் சாற்றை தனித்தனியாக எடுத்துக் கொண்டு, உங்கள் கண்களுக்குக் கீழே சாற்றை தடவவும். இப்படி செய்வதன் மூலம் சில நாட்களில் கருவளையங்கள் மறைந்து விடும்.

mint juice,cucumber,tomato,potato,fenugreek ,புதினா சாறு,  வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு, கருவளையம்

தக்காளி: தக்காளியில் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்க, 2 டீஸ்பூன் தக்காளிச் சாற்றில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைக் கலக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை கண்களுக்குக் கீழே தடவி, 10 நிமிடம் கழித்து, தண்ணீரில் கழுவவும், இவ்வாறு செய்தால் கருவளையம் பிரச்சனை நீங்கும்.

வெள்ளரிக்காய்: வெள்ளரி சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குகிறது. இதை பயன்படுத்த, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டவும். அதன் பிறகு, 10 நிமிடங்களுக்கு உங்கள் கண்களில் வைத்திருங்கள், இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையம் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

புதினா சாறு: புதினா கசக்கிய புதினா இலைகளும் கருவளையங்களை சிறப்பாக போக்கும். புதினா இலைகளை கசக்கி சாறு எடுத்து, அதனை கண்களுக்கு கீழ் தடவவும். அதனை அப்படியே 10-15 நிமிடங்கள் வரை விட்டு விடவும். பின்னர் கண்களை கழுவுங்கள்.

Tags :
|
|