Advertisement

பருக்கள் உதிர்ந்து முகம் பளிங்குபோல் ஆக சில டிப்ஸ்!!

By: Monisha Thu, 24 Sept 2020 5:38:13 PM

பருக்கள் உதிர்ந்து முகம் பளிங்குபோல் ஆக சில டிப்ஸ்!!

உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள் உதிர்ந்து முகம் பளிங்குபோல் ஆக இங்கே சில அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன் , பால் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.

வெள்ளை முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும்.

திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது.

pimples,face,beauty,papaya,grapes ,பருக்கள்,முகம்,அழகு,பப்பாளி,திராட்சை

ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.

சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 தேக்கரண்டி பால் பவுடர், 1/2 தேக்கரண்டி பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.

புதினாசாறு - 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம்பொடி - 1 டீஸ்பூன், சந்தனம் - கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப்பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.

Tags :
|
|
|