Advertisement

முடி உதிர்தல் நின்று முடி ஆரோக்கியமாக வளர...!

By: Monisha Thu, 19 Nov 2020 2:15:59 PM

முடி உதிர்தல் நின்று முடி ஆரோக்கியமாக வளர...!

பெண்களின் முக அழகில் கூந்தலுக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஆனால் அதிகமாக காற்று மாசு உண்டாவதால் அது நேராக நமது சருமம் மற்றும் முடிகளை பாதிக்கிறது. இந்த பதிவில் முடி உதிர்தல் நின்று முடி ஆரோக்கியமாக வளர சில எளிய குறிப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இது போல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும். நரை விழுவதையும் தடுக்கும்.

கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டிப் போட்டு பதமான நிலையில் பொரித்து எடுத்து, எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொண்டு தினமும் தலையில் மண்டை ஒட்டில் படும்படி மசாஜ் செய்து வந்தால் முடி நன்கு வளரும். முடி உதிர்தல் நின்று விடும்.

hair loss,beauty,natural,coconut oil,air pollution ,முடி உதிர்தல்,அழகு,இயற்கை,தேங்காய் எண்ணெய்,காற்று மாசு

வாரம் ஒரு முறை வெந்தயத்தை முதல் நாள் இரவு நேரத்தில் மூன்று ஸ்பூன் அளவு நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து ஊறிய வெந்தய நீரை வடிகட்டி நன்கு தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். ஊறிய வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலையை அலசவேண்டும். இதனால் முடி நன்கு வளரும். உடல் சூட்டையும் தணிக்கவும் உதவுகிறது.

அனைவரின் வீட்டிலும் சாதம் வடித்த நீர் கண்டிப்பாக இருக்கும். அதை வீணடிக்காமல் நமது தலையில் ஊறவைத்து குளித்தால் முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர தூண்டுகோலாக அமைகிறது.

வாரத்திற்கு மூன்று முறையாவது நாம் தலை குளிக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் அப்பொழுது தான் காற்று மாசுபடுதலில் இருந்து கூந்தலை காப்பாற்ற முடியும். கூந்தலை பாதுகாக்க தினமும் நாம் சாப்பிடும் வழக்கத்தில் கவனமாக இருப்பது அவசியம். அதிக ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலே முடி தானாக வளரும்.

Tags :
|