Advertisement

தலைமுடி உதிர்வு பிரச்னைக்கு இயற்கை முறை சீயக்காய்

By: Nagaraj Wed, 09 Sept 2020 10:35:53 AM

தலைமுடி உதிர்வு பிரச்னைக்கு இயற்கை முறை சீயக்காய்

தலைமுடி கொட்டுவதற்கு பல ஆயிரக் கணக்கில் செலவுகள் செய்து தீர்வு காண முயன்றும் தோல்வி அடைந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். இயற்கை முறையில் சீயக்காய் பொடி தயாரிப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள், இதனால் தலைமுடி கொட்டும் பிரச்னைக்கு சிறந்த தீர்வு ஏற்படும்.

தேவையானவை:

ஆவாரம்பூ- கைப்பிடியளவு

கறிவேப்பிலை- கைப்பிடியளவு

வெந்தயம்- 4 ஸ்பூன்

பூந்திக் கொட்டை- தேவையான அளவு

hair,natural nutmeg,health,hair loss,ingredients ,தலைமுடி, இயற்கை சீயக்காய், ஆரோக்கியம், உதிர்தல், பொருட்கள்

செய்முறை: ஆவாரம்பூவையும், கறிவேப்பிலையையும் காய வைத்துக் கொள்ளவும். அதனுடன் பூந்திக் கொட்டை மற்றும் வெந்தயம் சேர்த்து அரவை மில்லில் கொடுத்து அரைக்கவும்.

இந்த பொடியை தலைக்குத் தேய்த்து அலசினால் தலைமுடி கொட்டும் பிரச்சினை காணாமல் போய்விடும். இதனை வாரத்தில் 2 முறையாவது தொடர்ந்து செய்து வர வேண்டும். இயற்கையான பொருட்கள் அடங்கி உள்ளதால் தலைமுடிக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.

Tags :
|
|