Advertisement

அழகாக ஜொலிக்க இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இதை ட்ரை பண்ணுங்க!

By: Monisha Thu, 15 Oct 2020 5:07:16 PM

அழகாக ஜொலிக்க இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இதை ட்ரை பண்ணுங்க!

அழகாக ஜொலிக்க இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.

உதடுகள்
உங்கள் உதடுகளில் உள்ள வெடிப்புகள் நீங்க தினமும் சிறிதளவு 'வேசலின்' எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.

கண்கள்
முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி நல்ல அடர்த்தியாகவும், அழகாகவும் வளரும். சோர்வான கண்கள் உடையவர்கள் 'ரோஸ்' வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக வெட்டிய வெள்ளரித்துண்டு போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக் கொண்டாலே போதும் கண்கள் பொலிவுடன் காணப்படும்.

கருவளையம்
நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கருவளையங்கள் மறையும்.

lips,eyes,cornea,face,feet ,உதடுகள்,கண்கள்,கருவளையம்,முகம்,பாதம்

முகம்
இரவு உறங்கச் செல்லும்முன் முகத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கியமான வேலையாக இருக்க வேண்டும். எண்ணெய் பசையுள்ள சருமத்தை 'வால்நட் ஸ்க்ரப்’ கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான 'பேபி ஆயில்' கொண்டும் துடைத்து கொள்ளலாம். அவ்வாறு துடைக்கும்போது வட்ட வாக்கில் துடைக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட வேண்டும். எளிதான மாய்சரைசரும் உபயோகப்படுத்தலாம். இந்த மாய்சரைசரை முகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்கு கீழேயும் உபயோகிக்கலாம்.

தலைமுடி
இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடிக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைத்து விடும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணெயை (ஆலிவ் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய்) எடுத்து சூடு படுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. அவ்வாறு சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.

பாதம்
உங்கள் பாதங்கள் மிருதுவாகவும் பளிச்சென்றும் காணப்பட நாள்தோறும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நல்ல நறுமணமுள்ள குளியல் உப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, உங்கள் பாதங்களை அதில் ஒரு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப்படியே இருப்பது போராக இருந்தால், நல்ல ஸ்க்ரப்பர் கொண்டு குதிகாலைத் தேய்த்து கொண்டே இருக்கலாம். பின்னர், கால்களை தண்ணீர் அல்லது சோப்பால் நன்கு கழுவிவிட்டு, 'கோல்ட் க்ரீம்' அல்லது 'மாய்சரைசர்' போட வேண்டும். இதனால் உங்கள் பாதங்கள் மிருதுவாகவும் பளிச்சென்றும் இருக்கும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஓர் அழகியாக தோன்றலாம்.

Tags :
|
|
|
|