Advertisement

உதட்டின் மேல் வளரும் முடியை நிரந்தரமாக போக்க...!

By: Monisha Wed, 24 June 2020 5:38:13 PM

உதட்டின் மேல் வளரும் முடியை நிரந்தரமாக போக்க...!

சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும். இதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே இதனை நிரந்தரமாக போக்க முடியும்.

இதற்கு குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சமஅளவில் சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும். தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி நிரந்தரமாக உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப் படியாக குறையும்.

வாழைப் பழம் மற்றும் ஓட்ஸ் ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் வாழைப் பழத்தை மசித்து சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.

உருளைக் கிழங்கு ஒரு சிறப்பான ப்ளீச்சிங் ஏஜெண்ட். இதனை துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறமானது மங்க ஆரம்பிக்கும்.

Tags :
|
|