- வீடு›
- அழகு குறிப்புகள்›
- அடர்த்தியான புருவம் வேண்டுமா? உங்களுக்காக சில முக்கிய குறிப்புகள்!!
அடர்த்தியான புருவம் வேண்டுமா? உங்களுக்காக சில முக்கிய குறிப்புகள்!!
By: Monisha Wed, 17 June 2020 4:34:11 PM
அடர்த்தியான புருவம் தன முகத்திற்கு கூடுதல் அழகை தரும். சுமாராக காணப்படும் பெண்கள் கூட புருவம் பாராமரித்து வந்தால் அழகாக தெரிவார்கள். புருவம் நன்கு வளர சிறு வயதிலிருந்தே நல்ல தரமான மையை புருவத்தில் வைத்து விட்டு வந்தால் புருவம் அதே வடிவத்தில் அழகாக வளரும். புருவங்கள் சிலருக்கு என்ன செய்தாலும் வளராது. அவர்களுக்காக சில குறிப்புகள்!
விளக்கெண்ணெய்:
ஐ ப்ரோ பென்சிலால் இரவில் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய்யால் தொட்டு புருவத்தில் வரைந்து கொண்டு தூங்கினால் புருவம் அடர்த்தியாக வளரும். மேலும், தினமும் தூங்குவதுற்கு முன்பு புருவங்களில் விளக்கெண்ணெய் தேய்துவந்தால் இரண்டு மாதங்களில் புருவம் அடர்த்தியாக மாறுவதைக் காணலாம்.
தேங்காய் எண்ணெய்:
ஒரு பாத்திரத்தில் சிறிது அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி இளஞ்சூட்டில் புருவத்தில் மசாஜ் செய்து வர பலன் தெரியும்.
வெங்காயச் சாறு
வெங்காயச் சாற்றினை ஒரு பஞ்சில் நனைத்து தினமும் படுப்பதற்கு முன்பு தடவி வந்தால், புருவத்தில் விரைவில் முடிவளர்வதை வளர்வதை நம்மால் காணமுடியும்.
கற்றாழை
கற்றாழை சதைப் பகுதியை எடுத்து புருவத்தில் தேய்த்து வருந்தால், அங்கு ஏற்பட்டுள்ள தொற்று நீங்கி முடி வளர ஆரம்பித்துவிடும்.
சீரம்
புருவ சீரம் கடைகளில் கிடைக்கும் அதனை வாங்கி, இரவு தூங்குவதற்கு முன் முகத்தை கழுவிய பின், சீரத்தை ஒரு பிரஷினால் புருவத்தில் தடவ வேண்டும். மறுநாள் காலையில் கழுவுங்கள். இப்படி செய்வதால் புருவ முடிகள் தூண்டப்பட்டு, முடி வளர ஆரம்பிக்கும்.