Advertisement

அவர்களின் கோபமும் நியாயமானதுதான்... நடிகை ஷகிலா ஓப்பன் டாக்

By: Nagaraj Thu, 13 Apr 2023 7:58:53 PM

அவர்களின் கோபமும் நியாயமானதுதான்... நடிகை ஷகிலா ஓப்பன் டாக்

சென்னை; என்னுடைய 23 படங்கள் தணிக்கை செய்யாமல் நிறுத்தப்பட்டுள்ளன. எனது படங்களை வெளியிட விடாமல் மம்முட்டி தடுத்ததாக கேள்விப்பட்டேன். அவர்களின் கோபமும் நியாயமானது என்று நடிகை ஷகிலா தெரிவித்தார்.

ஒரு காலத்தில் பிரபல மலையாள கதாநாயகிகளின் படங்களுக்கு இணையாக ஷகிலாவின் பி கிரேட் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கொடி கட்டி பறந்தன. மலையாளம் மட்டுமின்றி தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இவரது படங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.

ஆனால் ஒரு கட்டத்தில் அவர் அங்கிருந்து விரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவருக்கு அந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

direction,film,movie ,மம்முட்டி, மலையாள கதாநாயகி, ஷகீலா

சில தமிழ் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். கிளாமரான நடிகை என்று பெயர் பெற்றாலும், பல லட்சங்கள் சம்பாதித்தாலும், அதையெல்லாம் உறவினர்கள், நண்பர்களிடம் இழந்து சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில், மலையாள திரையுலகில் தான் ஓரங்கட்டப்பட்டது குறித்து பேசிய ஷகீலா, “என்னுடைய 23 படங்கள் தணிக்கை செய்யாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

எனது படங்களை வெளியிட விடாமல் மம்முட்டி தடுத்ததாக கேள்விப்பட்டேன். அவர்களின் கோபமும் நியாயமானது. கோடிகளில் படம் எடுக்கிறார்கள். .எனது படங்கள் லட்சக்கணக்கில் எடுக்கப்பட்டு அந்த படங்கள் தோல்வியடைந்தால் அவர்களுக்கு கோபம் வருவது இயல்புதானே” எனக் கூறியுள்ளார்.

Tags :
|