- வீடு›
- பொழுதுபோக்கு›
- 14 மணிநேரத்தில் 40 லட்சம் பார்வை... 3.70 லட்சம் பேர் லைக்ஸ்
14 மணிநேரத்தில் 40 லட்சம் பார்வை... 3.70 லட்சம் பேர் லைக்ஸ்
By: Nagaraj Thu, 08 Sept 2022 09:29:26 AM
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வெளியாகி 14 மணிநேரத்தில் இதுவரை 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 3.70 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.
சாகாவரம் பெற்ற கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயற்சித்தும் நடக்கவில்லை. தற்போது மணிரத்னம் அதை படமாக எடுத்து சாதித்து விட்டார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்., 30ல் வெளியாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயசித்ரா, பிரகாஷ்ராஜ், சோபிதா துலிபாலா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்போது படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. 3.23 நிமிடம் ஓடக் கூடிய டிரைலருக்கு கமல்ஹாசன் முன்னுரை வழங்கி குரல் கொடுத்துள்ளார்.'' ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ நாடு தன் பொற்காலத்தை அடைவதற்கு முன் வானில் ஒரு பெரும் வால் விண்மீன் தோன்றியது...'' என்று தொடங்கும் கமலின் குரல் கணீர் என்று ஒலிக்கிறது.
''பேஸ் வாய்ஸ்''-சில் ஒலிக்கும் கமல் குரல், டிரைலருக்கு வலுவான
அடித்தளத்தை அமைக்கிறது. வேறு யார் குரல் கொடுத்திருந்தாலும் இவ்வளவு
எடுபட்டு இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆட்சி அதிகாரத்தை பிடிக்க
நடக்கும் போட்டி, பகை, வஞ்சம், சூழச்சி என கதையோட்டம் இருக்கும்படியாக
டிரைலர் அமைந்துள்ளது.
டிரைலரில் காட்டப்பட்டுள்ள
பிரமாண்ட அரண்மனைகள், போர்க்கள காட்சிகள், கடற்படை சண்டைக் காட்சிகள்,
கச்சிதமான கதாபாத்திரம், பிரமாண்ட உணர்வை நமக்குள் கடத்தும் பின்னணி இசை என
பக்காவாக டிரைலரில் பொருந்தி உள்ளது.
பாகுபலி
படத்திற்கு குறையாத பிரமாண்டம் இந்த படத்தில் இருக்கும் என டிரைலரை
பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது. டிரைலரில் விக்ரம், கார்த்தி,
ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட படத்தில்
உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் தோன்றும்படி உருவாக்கி உள்ளனர். டிரைலர்
வெளியாகி 14 மணிநேரத்தில் இதுவரை 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 3.70
லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.