- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஜெயிலர் படப்பிடிப்பை பார்க்க திரளும் மக்கள் கூட்டம்
ஜெயிலர் படப்பிடிப்பை பார்க்க திரளும் மக்கள் கூட்டம்
By: Nagaraj Thu, 13 Oct 2022 10:13:35 PM
சென்னை : ரஜினிகாந்த் பங்கேற்று நடிப்பதால் ஜெயிலர் படத்தை பார்க்க மக்கள் கூட்டமாக திரள்கின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி மற்றும் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் பகுதியில் நடந்து வருகிறது.
தென்பெண்ணை பாலத்தில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் சண்டை
காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும்
அனுமதிக்கப்படவில்லை.மேலும் இதில் நடிகர் ரஜினி மற்றும் முக்கிய
கதாபாத்திரங்கள் கலந்து கொள்வதால் உரிய போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு
நடந்து வருகிறது.
படப்பிடிப்பிற்காக
ரஜினிகாந்த் கடலூரில் இருப்பதால், ரஜினியை பார்க்க அருகில் உள்ள கிராம
மக்கள் குவிந்துள்ளனர். படையப்பா படத்தின் போதும் இவ்வளவு பெரிய மக்கள்
கூட்டம் திரண்டது குறிப்பிடத்தக்கது.