- வீடு›
- பொழுதுபோக்கு›
- சென்னையில் பார்வையற்ற மாணவர்களுக்காக துணிவு படத்தின் சிறப்புக் காட்சி
சென்னையில் பார்வையற்ற மாணவர்களுக்காக துணிவு படத்தின் சிறப்புக் காட்சி
By: Nagaraj Tue, 07 Mar 2023 5:37:35 PM
சென்னை: சென்னை கமலா திரையரங்கில் பார்வையற்ற மாணவர்களுக்கான துணிவு திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
அஜித்தின் கடைசி படம் துணிவு . எச்.வினோத் இயக்கிய இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் அஜித், நடிகர்கள் சமுத்திரக்கனி, மோகனசுந்தரம், ஜான் காக்கெய்ன், தர்ஷன், பால சரவணன் மற்றும் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
வங்கி முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்தார்.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது துணிவு .
இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது. அதேபோல் வெளிநாடுகளிலும் படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டது.
பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடி வசூல் சாதனை படைத்ததாக கூறப்படும் இப்படம் 50 நாட்களுக்கு பிறகு திரையரங்குகளிலும் வெற்றிகரமாக திரையிடப்படுகிறது. இந்நிலையில் பார்வையற்ற மாணவர்கள் அஜித்தின் துணிவு படத்தை கண்டு களித்துள்ளனர். இவர்களுக்கான சிறப்பு காட்சியை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் ஏற்பாடு செய்து திரையிட்டு இருக்கிறார்.
சென்னை கமலா திரையரங்கில் பார்வையற்ற மாணவர்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அஜித்தின் படத்தை அனைவரும் ரசித்துள்ளனர். இந்த சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துணிவு படக்குழுவினரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.