Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நகை நிறுவன விளம்பரத்தில் நடித்ததால் வந்த வினை: பிரகாஷ்ராஜூக்கு சம்மன்

நகை நிறுவன விளம்பரத்தில் நடித்ததால் வந்த வினை: பிரகாஷ்ராஜூக்கு சம்மன்

By: Nagaraj Fri, 24 Nov 2023 7:12:28 PM

நகை நிறுவன விளம்பரத்தில் நடித்ததால் வந்த வினை: பிரகாஷ்ராஜூக்கு சம்மன்

சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு சம்மன்... பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், பணமோசடி வழக்கில் சிக்கிய நகை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால் அடுத்த மாதம் 5-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு பல்வேறு இடங்களில் இயங்கி வந்த பிரணவ் ஜுவல்லரி என்ற நிறுவனம் நகை சீட்டு கட்டிய மக்களின் பணம் 100 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், அனைத்து நகை கடைகளும் மூடப்பட்டு அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகினர்.

money,public,fake companies,actor prakash raj,enforcement ,பணம், பொதுமக்கள், போலி நிறுவனங்கள், நடிகர் பிரகாஷ் ராஜ், அமலாக்கத்துறை

சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பிரணவ் ஜூவல்லர்ஸ் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்நிறுவனம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்திருப்பதும், அந்தப் பணத்தில் போலி நிறுவனங்களில் முதலீடு செய்து கணக்கு காட்டி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Tags :
|
|