- வீடு›
- பொழுதுபோக்கு›
- 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் அக்ஷய்குமார் நோட்டீஸ்
500 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் அக்ஷய்குமார் நோட்டீஸ்
By: Monisha Fri, 20 Nov 2020 4:03:36 PM
பாலிவுட் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அக்ஷய்குமார். சமீபத்தில் அவர் பீகாரை சேர்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒருவரிடம் ரூபாய் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுஷாந்த்சிங் கொலை வழக்கு குறித்து பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக் என்ற வாலிபர் தனது யூடியூப் சேனலில் ஆதாரம் இல்லாத செய்திகளை தெரிவித்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ரஷித் சித்திக் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் 500 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரி சட்ட நிபுணர்கள் மூலம் நடிகர் அக்ஷய்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
மேலும் ரஷித் சித்திக் தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மூன்று நாட்களுக்குள் இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்ஷய் குமாரின் நோட்டீஸில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
ஏற்கனவே ரஷித் சித்திக் மீது மகாராஷ்டிரா மந்திரி ஒருவரை அவதூறாக பேசியதாக மும்பை போலீசார் வழக்கு செய்துள்ள நிலையில் தற்போது அக்ஷய் குமாரும் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.