- வீடு›
- பொழுதுபோக்கு›
- அமெரிக்காவில் நடக்கும் சுதந்திர பேரணியில் பங்கேற்கும் நடிகர் அல்லு அர்ஜூன்
அமெரிக்காவில் நடக்கும் சுதந்திர பேரணியில் பங்கேற்கும் நடிகர் அல்லு அர்ஜூன்
By: Nagaraj Tue, 09 Aug 2022 10:34:06 PM
ஐதராபாத்: ரசிகர்கள் உற்சாகம்... அமெரிக்காவில் நடைபெறும் சுதந்திர பேரணியில் நடிகர் அல்லு அர்ஜூன் தேசிய கொடியை ஏந்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதனால் ஒவ்வொரு இந்தியரின் வீடுகளிலும் சுதந்திர தின கொடியை ஏற்றவேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் வெளிநாடுகளில் நடக்கவுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி
பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற உள்ளது. இந்த பேரணியில் பிரபல தெலுங்கு
நடிகர் அல்லு அர்ஜூன், தேசிய கொடியை ஏந்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில்
முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜூன், ஏராளமான ரசிகர்களின் அன்புக்கு
சொந்தக்காரர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் நல்ல
வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு 'புஷ்பா 2' திரைப்படம்
உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.