Advertisement

மீண்டும் தனது பணியை தொடங்கிய நடிகர் அமிதாப்பச்சன்!

By: Monisha Mon, 24 Aug 2020 4:07:21 PM

மீண்டும் தனது பணியை தொடங்கிய நடிகர் அமிதாப்பச்சன்!

கொரோனாவில் இருந்து குணமான நடிகர் அமிதாப்பச்சன் தற்போது படப்பிடிப்பு பணியை தொடங்கி உள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராதித்யா ஆகிய நால்வருக்கும் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஒவ்வொருவராக கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்.

இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர் அமிதாப்பச்சன், வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலத்திற்கு பின் தற்போது மீண்டும் தனது பணியை தொடங்கி உள்ளார்.

corona virus,actor amitabh bachchan,shooting,isolation ,கொரோனா வைரஸ்,நடிகர் அமிதாப்பச்சன்,படப்பிடிப்பு,தனிமைப்படுத்துதல்

'கெளன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் 12வது பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் அதில் தான் கலந்து கொண்டதாகவும் அமிதாப் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து, அதுகுறித்த ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்

கடந்த 2000ம் ஆண்டு தொடங்கிய 'கெளன் பனேகா குரோர்பதி' என்ற நிகழ்ச்சி தற்போது 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 20 ஆண்டுகளில் 11 சீசன்கள் முடிவடைந்து தற்போது 12வது சீசன் தொடங்கவுள்ளது. மேலும் 3வது சீசன் தவிர அனைத்து சீசன்களையும் அமிதாப்பச்சன் தான் தொகுத்து வழங்கினார். மூன்றாவது சீசனை மட்டும் நடிகர் ஷாருக்கான் தொகுத்து வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :