Advertisement

நான் ருத்ரன் படத்தை மீண்டும் இயக்கும் முனைப்பில் நடிகர் தனுஷ்

By: Nagaraj Mon, 08 June 2020 4:17:25 PM

நான் ருத்ரன் படத்தை மீண்டும் இயக்கும் முனைப்பில் நடிகர் தனுஷ்

மீண்டும் இயக்க உள்ளார்... தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட தனுஷ், கிடப்பில் போடப்பட்ட படத்தை மீண்டும் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டிருக்கிறார். ‘பவர் பாண்டி’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, பிரம்மாண்ட சரித்திர படத்தை தனுசே இயக்கி, நடித்து வந்தார்.

again,movement,dhanush,i rudran,curfew ,மீண்டும், இயக்கம், தனுஷ், நான் ருத்ரன், ஊரடங்கு

படத்துக்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டிருந்தனர். இந்தப் படத்தில் தனுசுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தமாகினர். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இப்படம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஊரடங்கு சமயத்தில் தனுஷ் அப்படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|