- வீடு›
- பொழுதுபோக்கு›
- ராஜூ முருகன் இயக்கும் படத்தில் தன்னுடைய கேரக்டர் பற்றி கூறிய நடிகர் கார்த்தி
ராஜூ முருகன் இயக்கும் படத்தில் தன்னுடைய கேரக்டர் பற்றி கூறிய நடிகர் கார்த்தி
By: Nagaraj Sun, 16 Oct 2022 09:38:35 AM
சென்னை: ராஜூ முருகன் இயக்கும் படத்தின் கேரக்டர் பற்றிய ரகசியத்தை போட்டு உடைத்து விட்டார் நடிகர் கார்த்தி. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.
நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சர்தார்’ படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கிறது. இதையடுத்து கார்த்தி நடிக்கவிருக்கும் படங்கள் ‘கைதி-2’ மற்றும் இயக்குநர் ராஜூ முருகனின் படம் என்று வரிசை நீள்கிறது.
இந்த நிலையில் இயக்குநர் ராஜூ முருகனின் இயக்கத்தில் நடிக்கவிருக்கும்
படத்தின் கதாப்பாத்திரம் பற்றி நடிகர் கார்த்தி வெளிப்படையாகக் கருத்து
தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, “தற்போது, ‘கைதி-2’ படம்
லைன் அப்பில் இருக்கிறது. அதற்கடுத்து ராஜுமுருகன் இயக்கத்தில் ஒரு
படத்தில் நடிக்க போகிறேன். அந்த படத்தில் இருக்கும் கதாபாத்திரத்தை மற்ற
நடிகர்கள் தேர்ந்தெடுத்து நடிப்பார்களா என்று தெரியாது.
ஏனென்றால்,
அதுவொரு சிக்கலான கதாப்பாத்திரம். என் கையில் கிடைத்திருக்கிறது. அதை
கச்சிதமாகப் பயன்படுத்தப் போகிறோம்..” என்றார். கார்த்தி கூறிய தகவல்
ரசிகர்கள் மத்தியில் வெகு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.