Advertisement

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் கார்த்தி டுவிட்!

By: Monisha Sun, 28 June 2020 1:16:59 PM

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் கார்த்தி டுவிட்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் லாக்அப்பில் உயிரிழந்திருக்கும் சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

sathankulam,actor karthi,lockup death,jayaraj ,சாத்தான்குளம்,நடிகர் கார்த்தி,லாக்அப் மரணம்,ஜெயராஜ்,பென்னிக்ஸ்

இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் சூர்யா, நேற்றிரவு கண்டம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையைக் குறிப்பிட்டு அவரது தம்பியும் நடிகருமான கார்த்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"இந்த வலிமிகுந்த சம்பவமும், ஜெயராஜ் குடும்பத்துக்கு அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியும் நமது நினைவுகளை நீண்ட நாட்களுக்கு ஆக்கிரமித்திருக்கும். இது ஒரு சில தனிப்பட்டவர்களின் தவறா அல்லது ஒட்டுமொத்த அமைப்பின் தவறா என்பது இந்த வழக்கு எப்படி கையாளப்படுகிறது என்பதன் மூலம் தெரிந்துவிடும்" இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

Tags :