- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் கிஷோர் குமாரின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கம்
நடிகர் கிஷோர் குமாரின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கம்
By: Nagaraj Tue, 03 Jan 2023 10:23:49 PM
பெங்களூர்: காந்தாரா படத்தில் நடித்துள்ள நடிகர் கிஷோர் குமாரின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம் ‘காந்தாரா’. கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. முதலில் கன்னடத்தில் மட்டும் வெளியான இப்படம் கர்நாடகாவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. நல்ல வசூலையும் குவித்தது.
இதைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ‘கந்தாரா’ படம் வெளியானது. இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வன அதிகாரி முரளிதர் வேடத்தில் நடிகர் கிஷோர் குமார் நடித்துள்ளார்.
ஷீ அண்ட் தி ஃபேமிலி மேன் உள்ளிட்ட வெப் சீரிஸ்களில் நடித்த அனுபவமும் அவருக்கு உண்டு. தனது சமூக வலைத்தளமான ட்விட்டரில் அவ்வப்போது வெளிப்படைத்தன்மையுடன் பதிவுகளை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பயனரும் அவரது ட்விட்டர் கணக்கைத் தேடினால், ட்விட்டரின் விதிகளை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. கணக்கு எப்போது முடக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. இது தவிர இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிலும் அவர் பதிவிட்டு வருகிறார்.