Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் சங்கம் ஏன்ப்பா துருப்பிடிச்சு கிடக்கு... நடிகர் மன்சூர் கேள்வி

நடிகர் சங்கம் ஏன்ப்பா துருப்பிடிச்சு கிடக்கு... நடிகர் மன்சூர் கேள்வி

By: Nagaraj Mon, 15 May 2023 7:59:06 PM

நடிகர் சங்கம் ஏன்ப்பா துருப்பிடிச்சு கிடக்கு... நடிகர் மன்சூர் கேள்வி

சென்னை: நடிகர்கள் ரூ. 40, 50, 60 கோடிகள் சம்பளம் வாங்குறாங்க. ஆனா ஏன் நடிகர் சங்கம் துரு பிடிச்சி கெடக்குதுன்னு தெரியவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பினார்.

நடிகர் சங்கம் சார்பில், மறைந்த நடிகர்கள் மனோபாலா, மயில்சாமி, இயக்குநர் கஜேந்திரன் ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தி.நகர் சர்.பி.டி. தியாகராஜ மகாலில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பொன்வண்ணன், “நான் திரையுலகில் நுழைந்த நாள் முதல் மூவருடனும் பயணித்துள்ளேன். மூவருக்கும் மூன்று குணங்கள் உண்டு. எனக்கும் மனோபாலா அண்ணனுக்கும் அடிக்கடி சண்டை வரும். அடுத்த நாளே பேசுவார்.

புதிய தொழில்நுட்பம் கற்பதில் மனோபாலா அண்ணனுக்கு நிகர் யாருமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் உதவுவார்கள்” என்றார்.

actor,angam,dhru,mansoor ali khan,sangam, ,சங்கம், துரு, நடிகர், மன்சூர் அலிகான், வேதனை

பின்னர் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ”இப்படி ஒரு நிகழ்வு நடத்துவதன் மூலம் தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது என்னால் நம்ப முடிகிறது.

நானும் மனோபாலா அண்ணனும் நிறைய குசும்பு செய்வோம். அது அனைத்து கதாநாயகிகளுக்கும் தெரியும். நடிகர் சங்கம் துருபிடிச்சி கெடக்கு; நடிகர்கள் ரூ. 40, 50, 60 கோடிகள் சம்பளம் வாங்குறாங்க. ஆனா ஏன் நடிகர் சங்கம் துரு பிடிச்சி கெடக்குதுன்னு தெரில. பல அரசியல் சம்பவங்களை நடிகர் சங்கம் செய்தது. மிகப்பெரிய ஜாம்பவான்கள் வாழ்ந்த பூமி.

நான் நடிகர் சங்கம் கட்டடத்தில் இருந்த 25 தென்னை மரங்களுடன் பேசுவேன். விளையாடுவேன். ஆனால் இப்போது முடியவில்லை. மீண்டும் நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்றார்.

Tags :
|
|
|
|