Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வீழ்வேனென்று நினைத்தாயோ!...மீண்டு வருவேன்; சென்னைக்காக குரல் கொடுத்த நடிகர் பார்த்திபன்

வீழ்வேனென்று நினைத்தாயோ!...மீண்டு வருவேன்; சென்னைக்காக குரல் கொடுத்த நடிகர் பார்த்திபன்

By: Monisha Tue, 07 July 2020 10:14:01 AM

வீழ்வேனென்று நினைத்தாயோ!...மீண்டு வருவேன்; சென்னைக்காக குரல் கொடுத்த நடிகர் பார்த்திபன்

வந்தாரை வாழவைக்கும் சென்னை தற்போது கொரோனா வைரஸால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சென்னையில் இருந்து தப்பித்தால் போதும் என்று கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கானோர் சென்னையை விட்டு சொந்த ஊருக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் கனத்த மனதோடு சென்னையில் இருந்து வெளியேற மனமே இல்லாமல் தான் சென்றனர்.

சென்னை இதுபோன்ற பல இடர்பாடுகளை சந்தித்த போதிலும் அதிலிருந்து உடனடியாக மீண்டு வந்துள்ளது. அந்த வகையில் சென்னை இந்த கொரோனா வைரஸில் இருந்தும் மீண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 'நான் சென்னை' என்று சென்னை பேசுவது போல் ஒரு கவிதையை நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது கம்பீர குரலில் பேசியுள்ளார். அந்த கவிதை வரிகள் வருமாறு:-

chennai,corona virus,vulnerability,actor parthiban,poem ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,நடிகர் பார்த்திபன்,கவிதை

தடைகள் ஆயிரம் தகர்த்தவன்
படைகள் ஆயிரம் பார்த்தவன்
பஞ்சம் கண்டவன், பகையும் கண்டவன்
பேரலையைக் கண்டவன், பேரிடரும் கண்டவன்
பெயர் மாறி, உரு மாறி வலுவானவன்,
எதுவந்த போதும் நிறம் மாறாதவன்
வந்தவர் எத்தனை, போனவர் எத்தனை
கண்டது எத்தனை, கொண்டது எத்தனை
என் பலம் எனதல்ல,
என்னில் இரண்டற கலந்து வாழும் என் மக்களே என் பலம்.
நீரால், நெருப்பால், காற்றால், நிலத்தால், உளத்தால்
எவ்வழி இடர் வரினும், தளர்வரினும் என் கரம் இறுகப் பற்றும்
என் மக்களே என் பலம்.
என் மக்கள் மனதில் தன்னம்பிக்கை அணிந்து கொண்டு
முகத்தில் கவசம் அணிந்து
சமூக விலகலோடு
இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு தோள் கொடுப்பர்
வீழ்வேனென்று நினைத்தாயோ!
மீண்டு வருவேன்! நான்சென்னை!.
என்னை வீழ்வேனென்று நினைத்தாயோ!
மீண்டு வருவேன்! நான்சென்னை!.

இந்த கவிதையை தமிழக அமைச்சர் வேலுமணி அவர்கள் தனது சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

Tags :