Advertisement

நடிகர் பிரபாஸ் தனது 22-வது படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு

By: Monisha Tue, 18 Aug 2020 2:39:30 PM

நடிகர் பிரபாஸ் தனது 22-வது படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளாகவே தென்னிந்திய மாஸ் நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் பான்-இந்தியா திரைப்படங்களாக அதாவது பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களாக உள்ளன. அந்த வகையில் தற்போது பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படமும் பான்-இந்தியா திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் தற்போது 'ராதே ஷ்யாம்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படமும் பான்-இந்தியா திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தை அடுத்து அவர் ’நடிகையர் திலகம்’ இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் மூன்றாம் உலகப் போர் குறித்த இந்தத் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ளது என்பதும், இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

actor prabhas,film,bollywood director,om raut,title ,நடிகர் பிரபாஸ்,திரைப்படம்,பாலிவுட் இயக்குனர்,ஓம் ரவுட்,டைட்டில்

இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் தனது சமூக வலைத்தளத்தில் தனது 22-வது படம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். பிரபாஸ் 22வது படத்தை இயக்க்கவுள்ளவர் பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுட் என்பவர். இப்படத்திற்கு 'ஆதி புருஷ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பூஷன் குமார் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் மிகப் பிரமாண்டமான திரைப்படமான இந்த படம் தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் பான்-இந்தியா திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பாலிவுட் இயக்குனருடன் நடிகர் பிரபாஸ் இணைந்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Tags :
|