- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஜோர்டானில் படக்குழுவினருடன் சிக்கிய நடிகர் பிருத்விராஜ் கொச்சி வந்தார்!
ஜோர்டானில் படக்குழுவினருடன் சிக்கிய நடிகர் பிருத்விராஜ் கொச்சி வந்தார்!
By: Monisha Fri, 22 May 2020 4:57:17 PM
மலையாளத்தில் முன்னணி நடிகர் பிருத்விராஜ் கடந்தாண்டு இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் பிளஸ்ஸி இயக்கும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் ஜோர்டான் சென்றிருந்தார். பிருத்விராஜ் ஜோர்டானுக்கு சென்ற பிறகுதான் கொரோனா உலகம் முழுவதும் பரவியது. இதனால் பிருத்விராஜால் இந்தியா திரும்ப முடியவில்லை. ஜோர்டானிலேயே படக்குழுவினருடன் சிக்கிக்கொண்டார். இருப்பினும் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.
இதனிடையே வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அவரும் படக்குழுவினர் 57 பேரும் இந்தியா அழைத்து வரப்பட்டனர். ஜோர்டானில் இருந்து டெல்லி வந்த அவர்கள், பின்னர் வேறு ஒரு விமானம் மூலம் இன்று காலை கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.