- வீடு›
- பொழுதுபோக்கு›
- நாளை ஜெய்லர் திரைப்படம் ரிலீஸ் .. இன்று இமயமலை புறப்பட்டார் நடிகர் ரஜினி
நாளை ஜெய்லர் திரைப்படம் ரிலீஸ் .. இன்று இமயமலை புறப்பட்டார் நடிகர் ரஜினி
By: vaithegi Wed, 09 Aug 2023 10:22:25 AM
ஜெய்லர் திரைப்படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை இமயமலை புறப்பட்டு சென்றார் .. நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜெய்லர்’. இதில் ரம்யா கிருஷ்ணன் , தமன்னா, யோகி பாபு, விநாயகன், விடிவி கணேஷ், லெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து உள்ளனர்.
மேலும் அத்துடன் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், கன்னடா சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெய்லர் படத்திற்கு அனிரூத் இசையமைத்து உள்ளார். இப்படம் நாளை திரைக்கு வரவிருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை இமயமலை புறப்பட்டு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இமயமலைக்கு செல்வதாகவும், ஜெய்லர் படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கொரோனா காலக்கட்டம் மற்றும் உடல்நிலை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2 ஆண்டுகளாக மட்டுமே நீண்ட பயணங்களை தவிர்த்து வந்தார்.