- வீடு›
- பொழுதுபோக்கு›
- பேச்சு சர்ச்சை ஆனதால் விளக்கம் அளித்தார் நடிகர் சதீஷ்
பேச்சு சர்ச்சை ஆனதால் விளக்கம் அளித்தார் நடிகர் சதீஷ்
By: Nagaraj Thu, 10 Nov 2022 5:29:36 PM
சென்னை: தனது பேச்சு சர்ச்சைக்கு உள்ளானதால் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகர் சதீஷ்.
ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த நவம்பர் 2 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. ஜாவித் ரியாஸ் இசை அமைத்துள்ள இந்த படத்தில் இந்த படத்தில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஓ மை கோஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சன்னி லியோன், ஜி.பி.முத்து ஆகியோரின் மேடை பேச்சுக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் சதீஷின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் நடிகைகளில் சன்னி லியோன் புடவை அணிந்தும், தர்ஷா குப்தா மாடர்ன் உடையிலும் வந்ததை சுட்டிக்காட்டி நடிகர் சதீஷ் பேசினார். அப்போது பம்பாயில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த சன்னி லியோன் எப்படி டிரஸ் பண்ணியிருக்காங்க. கோயம்புத்தூர்ல இருந்து ஒரு பொண்ணு வந்துருக்கு தர்ஷா குப்தா என சொல்லிவிட்டு அவங்க எப்படி நம்ம கலாச்சாரத்துக்கு மாறிட்டாங்கன்னு சொல்ல வந்தேன் என அவர் பேசியிருந்தார்.
அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மூடர்கூடம்
திரைப்பட இயக்குனர் நவீன், பாடகி சின்மயி, பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இது
குறித்து காட்டமாக விமர்சித்திருந்த நிலையில் தற்போது நடிகர் சதீஷ் தனது
சர்ச்சை கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
'ஓ மை கோஸ்ட்'
திரைப்படத்தின் ஆடியோ விழாவில் தர்ஷா குப்தா எனது அருகில்
அமர்ந்திருந்தார். அப்போது தர்ஷா என்னிடம் கூறினார், "நான் சன்னி லியோனை
விட மாடர்னாக டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கிறேன். அவங்க எப்படி வராங்க என்று
பார்ப்போம்" என்று சொன்னார்.
சன்னிலியோன் பட்டு புடவை கட்டிக்கொண்டு
வந்திருந்தார். அதை பார்த்த தர்ஷா, அப்செட் ஆகி என்னிடம் கூறினார்.
"என்னங்க..நான் இப்படி வந்திருக்கிறேன். அவங்க புடவை கட்டிகிட்டு வந்து
இருக்காங்க" என்று கூறினார். அதைக் கேட்டு நான் 'நல்ல பாயிண்ட் இது' என்று
கூறினேன்.
இதை போய் மேடையில் பேசும்போது சொல்லுங்க என்று சொன்னார்கள். இதை தான் நான் மேடையில் பேசினேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.