Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும்; நடிகர் சதீஷ் டுவிட்

தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும்; நடிகர் சதீஷ் டுவிட்

By: Monisha Mon, 12 Oct 2020 5:20:38 PM

தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும்; நடிகர் சதீஷ் டுவிட்

ஊராட்சி மன்றத் தலைவி அவமரியாதை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும் என்று நகைச்சுவை நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி ஆலோசனை கூட்டத்தின்போது கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

panchayat president,disrespect,caste,actor satish,tweet ,ஊராட்சி மன்றத் தலைவி,அவமரியாதை,ஜாதி,நடிகர் சதீஷ்,டுவிட்

அந்த வகையில் இதுதொடர்பாக நகைச்சுவை நடிகர் சதீஷ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"ஜாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம்... கண்டிக்கத் தக்க கொடூர செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ... நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். அனைவரும் சமம்" என பதிவிட்டுள்ளார்.

Tags :
|