Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்; எஸ்பிபி மறைவு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன்

இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்; எஸ்பிபி மறைவு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன்

By: Monisha Sat, 26 Sept 2020 10:46:10 AM

இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்; எஸ்பிபி மறைவு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்பிபி மறைவு குறித்து தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது.. உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடிக் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்... இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம். எங்கள் குரல் அரசனே உறங்குங்கள். இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

singer,sp balasubramaniam,funeral,tribute,actor sivakarthikeyan ,பாடகர்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,நல்லடக்கம்,அஞ்சலி,நடிகர் சிவகார்த்திகேயன்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் இன்று அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்தநிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அடக்கம் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

Tags :
|