- வீடு›
- பொழுதுபோக்கு›
- சிங்கம்பட்டி ஜமீன் மறைவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்
சிங்கம்பட்டி ஜமீன் மறைவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்
By: Monisha Mon, 25 May 2020 3:02:17 PM
சுதந்திர இந்தியாவின் கடைசி மன்னர் நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ஆவார். இவர் நேற்று இயற்கை எய்தினார். இவருடைய மறைவால் சிங்கம்பட்டி பகுதியே சோகமயமாகியுள்ளது. சிங்கம்பட்டி ஜமீந்தார் முருகதாஸ் தீர்த்தபதி அவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படம்.
இந்த நிலையில் சிங்கம்பட்டி ஜமீன் மறைவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- ‘சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா! அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்’என்று கூறியுள்ளார்.
மேலும் ‘சீமராஜா’ படப்பிடிப்பின்போது சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி அவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்தூள்ளார்.